உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சாலையில் மழை நீர்; பூவையில் அவலம்

சாலையில் மழை நீர்; பூவையில் அவலம்

பூந்தமல்லி : சென்னையின் புறநகரில், பூந்தமல்லி நகராட்சி அமைந்துள்ளது. இங்கு 80,000த்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.பூந்தமல்லி டிரங்க் சாலையில், பூந்தமல்லி நகராட்சி அலுவலகம் அருகே பேருந்து நிலையம், நீதிமன்றம், சார் - பதிவாளர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், தாலுகா அலுவலகம், காவல் நிலையம் மற்றும் இரண்டு திரையரங்கம், நகைக்கடை, துணிக்கடை, உணவகம் உள்ளிட்ட ஏராளமான வணிக கடைகள் உள்ளன.இங்கு, தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். முக்கிய பகுதியாக உள்ள இந்த சாலையில், மழைநீர் வடிகால்வாய் இல்லை. இதனால், சிறு மழை பெய்தாலே, சாலையில் குட்டை போல் மழைநீர் தேங்கி நிற்கிறது.இதனால், பூந்தமல்லி வந்து செல்லும் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே, இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக, இந்த சாலையில் மழைநீர் வடிகால்வாய் அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.l பூந்தமல்லி அருகே கரையான்சாவடியில் இருந்து ஆவடி செல்லும் சாலையை பயன்படுத்தி, தினமும் ஏராளமான வாகன ஓட்டிகள் செல்கின்றனர். இந்த சாலையின் இருபுறமும், ஏராளமான வணிக கடைகள், உணவகங்கள் உள்ளன. இந்நிலையில், இந்த சாலையில் மண் அதிக அளவில் படித்துள்ளதால், வாகனங்கள் செல்லும் போது புழுதி பறக்கிறது. இதன் காரணமாக இருசக்கர வாகன ஓட்டிகள், நடைபாதை வியாபாரிகள், பொதுமக்கள் கண்களில் துாசி விழுந்து அவதிக்கு உள்ளாகின்றனர். புழுதியால் சாலையோரம் உள்ள வீடுகளில் வசிப்போருக்கு சுவாசம் சார்ந்த பாதிப்பு ஏற்படுகிறது. இந்த சாலையில் படிந்துள்ள மண்ணை அகற்ற வேண்டும்.மேலும். லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் மண் ஏற்றிச் செல்லும் போது, தார்ப்பாய் போர்த்தி மூடி எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை