உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நெடுஞ்சாலையில் ஆபத்தான பயணம் நடைமேம்பாலம் அமைக்க கோரிக்கை

நெடுஞ்சாலையில் ஆபத்தான பயணம் நடைமேம்பாலம் அமைக்க கோரிக்கை

திருவள்ளூர்:சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சீரமைப்பு பணிகள் தற்போது நடந்து வருகிறது. இந்த நெடுஞ்சாலையில் தினமும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நெடுஞ்சாலையில் பூந்தமல்லி முதல் ஸ்ரீபெரும்புதுார் டோல்கேட் வரை சீரமைப்பு பணிகள் நிறைவடைந்து விட்டன.பூந்தமல்லி - ஸ்ரீபெரும்புதுார் வரை உள்ள அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலை பகுதியில், திருமழிசை செல்லும் சாலை சந்திப்பு, நசரத்பேட்டை, செம்பரம்பாக்கம், பாப்பன்சத்திரம், செட்டிபேடு, தண்டலம், இருங்காட்டுக்கோட்டை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் நெடுஞ்சாலையின் ஒருபுறம் உள்ள பேருந்து நிறுத்தத்தில் இருந்து, மறுபுறம் உள்ள நிறுத்தத்திற்கு செல்ல பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ - மாணவியர் மற்றும் இப்பகுதிவாசிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.அதேபோல், இப்பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு செல்வோரும் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், நடைமேம்பாலம் இல்லாததால் நெடுஞ்சாலையை கடந்து செல்லும்போது அடிக்கடி விபத்தில் சிக்கும் நிலையும் ஏற்படுகிறது.எனவே, தேசிய நெடுஞ்சாலையில் கிராம பகுதியில் சாலை மற்றும் மருத்துவமனையை கடக்கும் வகையில் நடைமேம்பாலம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, 10க்கும் மேற்பட்ட கிராம பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி