உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / குளத்திற்கு தடுப்புச்சுவர் அமைக்க கோரிக்கை

குளத்திற்கு தடுப்புச்சுவர் அமைக்க கோரிக்கை

பொன்னேரி:பொன்னேரி அடுத்த வெள்ளகுளத்தில், பொன்னேரி - தேவதானம் சாலையை ஒட்டி வளைவு பகுதியில் பொது குளம் அமைந்துள்ளது. குளத்தின் சாலையோர பகுதியில் தடுப்புச்சுவர் அமைக்கப்படாமல் உள்ளதால், இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் தடுமாற்றம் அடைகின்றனர்.இந்த வழியாக செல்லும் பள்ளி பேருந்து, தனியார் தொழிற்சாலை பேருந்துகள், தேவதானம் ரங்கநாதர் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வாகனங்கள் விபத்தில் சிக்கும் வாய்ப்புள்ளது.எனவே, குளத்தையொட்டி உள்ள சாலையோரங்களில் இரும்பு தடுப்புகள் அமைக்கவும், ஒளிரும் ரிப்ளக்டர்கள் பொருத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி