உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அங்கன்வாடி மைய கட்டடத்தை இடித்து அகற்ற கோரிக்கை

அங்கன்வாடி மைய கட்டடத்தை இடித்து அகற்ற கோரிக்கை

திருவாலங்காடு:திருவாலங்காடில் பயன்பாடில்லாத அங்கன்வாடி மையத்தை இடித்து அகற்ற வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். திருவாலங்காடு ஊராட்சியில், பவானி நகர் மற்றும் பராசக்தி நகர் குழந்தைகள் கல்வி பயில, பி.டி.ஓ., அலுவலக வாயிலில், எட்டு ஆண்டுகளுக்கு முன், 7 லட்சம் ரூபாய் மதிப்பில் அங்கன்வாடி மைய கட்டடம் கட்டப்பட்டது. புதிதாக கட்டப்பட்ட கட்டடத்தை ஆய்வு செய்த அதிகாரிகள், 'கட்டடம் உறுதி தன்மையுடன் இல்லை' என, சான்று அளித்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, அதன் அருகே மாற்று கட்டடம் கட்டப்பட்டு தற்போது பயன்பாட்டில் உள்ளது. ஆனால், பழைய கட்டடம் பயன்பாட்டிற்கு வராமல் விடப்பட்டதால், தற்போது செடிகள் வளர்ந்து காணப்படுகிறது. மேலும், இந்த கட்டடம் பாம்பு, விஷப் பூச்சி மற்றும் நாய்களின் இருப்பிடமாக மாறியுள்ளதால், பி.டி.ஓ., அலுவலகம் வருவோர் அச்சத்துடனேயே வருகின்றனர். எனவே, பயன்பாடின்றி உள்ள கட்டடத்தை இடித்து அகற்ற, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை