உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கழிவுநீர் கால்வாயில் மின்மாற்றி வேறு இடத்திற்கு மாற்ற கோரிக்கை

கழிவுநீர் கால்வாயில் மின்மாற்றி வேறு இடத்திற்கு மாற்ற கோரிக்கை

வேப்பம்பட்டு:திருவள்ளூர் அடுத்த பெருமாள்பட்டு அருகே உள்ளது 89 வேப்பம்பட்டு ஊராட்சி. வேப்பம்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து ஊராட்சி மன்றம் வழியே உள்ள ஒன்றிய சாலையை வேப்பம்பட்டு மற்றும் பெருமாள்பட்டு உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமவாசிகள் பயன்படுத்திவருகின்றனர்.கற்கள் பெயர்ந்து மோசமான நிலையில் உள்ள ஒன்றிய சாலையில் நடந்து செல்பவர்கள் மற்றும் இரு சக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.மேலும் இந்த சாலையோரம் உள்ள கழிவுநீர் கால்வாயில் மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இவ்வழியே வாகனங்களில் செல்வோர் அச்சத்துடன் சென்று வருகின்றனர். கழிவுநீர் கால்வாயில் உள்ள மின்மாற்றியை வேறு இடத்திற்கு மாற்ற மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை