உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மாவட்ட நுாலகத்தில் 25ல் பேச்சு போட்டி

மாவட்ட நுாலகத்தில் 25ல் பேச்சு போட்டி

திருவள்ளூர், திருவள்ளூர் தேரடி அருகில் மாவட்ட மத்திய நுாலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நுாலகத்தின் வாசகர் வட்டம் சார்பில், உலக புத்தக தினத்தை முன்னிட்டு, வரும் 25ம் தேதி காலை 9:00 மணியளவில் பேச்சு போட்டி நடைபெற உள்ளது.'புத்தக வாசிப்பு' என்ற தலைப்பில் மாணவ - மாணவியர் பங்கேற்று, மூன்று நிமிடம் பேச வேண்டும். முதல் மூன்று இடங்களை பெறுவோருக்கு, பரிசு மற்றும் கேடயம் வழங்கப்படும். பங்கு பெறும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை