உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஆக்கிரமிப்பால் 20 அடி சாலை 10 அடியாக சுருங்கிய அவலம்

ஆக்கிரமிப்பால் 20 அடி சாலை 10 அடியாக சுருங்கிய அவலம்

திருத்தணி:திருத்தணி ஒன்றியம் பட்டாபிராமபுரம் ஊராட்சிக்குட்பட்டது விநாயகபுரம் கிராமம். இங்கு, 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் உபயோகப்படுத்தும் சுடுகாட்டிற்கு செல்வதற்கு, 15 ஆண்டுகளுக்கு முன் ஒன்றிய நிர்வாகம் சார்பில், 20 அடி அகலத்தில், 1 கி.மீ., துாரத்திற்கு தார்ச்சாலை அமைக்கப்பட்டது.இச்சாலை வழியாக இறந்தவர்களின் உடல்களை சுடுகாட்டிற்கு கொண்டு சென்று, இறுதி சடங்குகள் செய்து வந்தனர். இந்நிலையில், சுடுகாடு சாலையை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகின்றனர். மேலும், குப்பை கொட்டும் இடமாகவும் பயன்படுத்தி வருகின்றனர்.தற்போது, தார்ச்சாலை 10 அடியாக சுருங்கிவிட்டது. இதனால், இறுதி சடங்கிற்கு செல்லும் போது மக்கள் கடும் சிரமப்படுகின்றனர். மேலும், இறுதி ஊர்வலமாக வாகனங்களில் செல்ல முடிவதில்லை. மேலும், சாலையோரம் முட்செடிகள் வளர்ந்துள்ளது. தார்ச்சாலையும் சேதமடைந்துள்ளது.எனவே, கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி, மீண்டும் 20 அடி அகலத்தில் தார்ச்சாலையை சீரமைக்க வேண்டும் என, விநாயகபுரம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி