உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திறக்கப்படாத சுத்திகரிப்பு நிலையம் ஆறு ஆண்டுகாள தொடரும் அவலம்

திறக்கப்படாத சுத்திகரிப்பு நிலையம் ஆறு ஆண்டுகாள தொடரும் அவலம்

திருப்பாச்சூர், கடம்பத்துார் - திருவள்ளூர் நெடுஞ்சாலையில் திருப்பாச்சூர் ஊராட்சி அமைந்துள்ளது. இப்பகுதியில், நெடுஞ்சாலையோரம் உள்ள விநாயகர் கோவில் அருகே, ஊரக வளர்ச்சித் துறையின் வாயிலாக, கடந்த 2018 - 19ம் ஆண்டு 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 2,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டது.இந்த குடிநீர் நிலையம் கட்டப்பட்டு ஆறு ஆண்டுகளாகியும், தற்போது வரை பயன்பாட்டிற்கு வராமல் செடி, கொடிகள் வளர்ந்து மாயமாகி வருகிறது. அருகில் ஊராட்சி அலுவலகம் இருந்தும், சுத்திகரிப்பு நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வராதது, பகுதிவாசிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட ஒன்றிய அதிகாரிகள் திருப்பாச்சூர் ஊராட்சியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ