உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கஞ்சா, குட்கா பறிமுதல் இருவர் கைது

கஞ்சா, குட்கா பறிமுதல் இருவர் கைது

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள மாநில எல்லையோர சோதனைச்சாவடியில், போலீசார் நேற்று வாகன சோதனை செய்தனர். அப்போது, ஒடிசாவில் இருந்து சென்னை நோக்கி சென்ற தனியார் சொகுசு பேருந்தை நிறுத்தி, பயணியரின் உடமைகளை சோதனையிட்டனர். அதில் பயணித்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கணேஷ்வர் பாரிக், 31, ராமகந்தா பாரிக், 40, ஆகியோரிடம், ஒரு கிலோ கஞ்சா, ஐந்து கிலோ குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். வழக்கு பதிந்த ஆரம்பாக்கம் போலீசார், இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !