உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  காப்பர் ஒயர் திருடிய இரண்டு பேர் சிக்கினர்

 காப்பர் ஒயர் திருடிய இரண்டு பேர் சிக்கினர்

திருவாலங்காடு: திருவாலங்காடு அருகே காப்பர் ஒயர் திருடிய இருவரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். கனகம்மாசத்திரம் அடுத்த புதுார் டிடி காலேஜ் அருகே, சில நாட்களுக்கு முன், 5 கிலோ காப்பர் ஒயர் திருடுபோனது. இதுகுறித்து வழக்கு பதிந்த கனகம்மாசத்திரம் போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில் நேற்று, திருவாலங்காடு ஒன்றியம் வீரராகவபுரம் ஊராட்சி மாதா கோவில் இருளர் காலனியை சேர்ந்த ஜெயகுமார், 19, ரேவன்குமார், 24, இருவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ