உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / உத்தண்டிகண்டிகை - அனுப்பம்பட்டு சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

உத்தண்டிகண்டிகை - அனுப்பம்பட்டு சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

பொன்னேரி:உத்தண்டிகண்டிகை - அனுப்பம்பட்டு சாலை யை சீரமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வரு கின்றனர். பொன்னேரி - மீஞ்சூர் மாநில நெடுஞ்சாலையில் உள்ள அடுத்த உத்தண்டிகண்டிகை பகுதியில் இருந்து, அனுப்பம்பட்டு பகுதிக்கு செல்லும் சாலை போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் இருக்கிறது. சாலை முழுதும் பள்ளங்கள் ஏற்பட்டும், சரளை கற்கள் பெயர்ந்து உள்ளன. பள்ளங்களில் மழைநீர் தேங்கி சகதியாக மாறி, வாகன ஓட்டிகள் சிரமத்துடன் பயணிக்கும் நிலை உள்ளது. இரவு நேரங்களில், சாலைப்பள்ளங்களில் வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து சிறு சிறு விபத்துகளுக்கும் உள்ளாகின்றனர். உத்தண்டிகண்டிகை, புலிக்குளம், ஆத்ரேயமங்களம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்தவர்கள், அனுப்பம்பட்டு ரயில் நிலையம் செல்ல இந்த சாலையை பயன்படுத்துகின்றனர். சாலை சேதம் அடைந்து இருப்பதால், அவர்கள் உரிய நேரத்தில் ரயில் நிலையத்திற்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர். நான்குசக்கர வாகனங்கள் இந்த சாலையை பயன்படுத்தாமல், எலவம்பேடு, மேட்டுப்பாளையம், முறிச்சம்பேடு வழியாக, ஐந்து கி.மீ., சுற்றி பயணிக்கின்றன. மீஞ்சூர் ஒன்றிய நிர்வாகம் நிதி ஒதுக்கீடு செய்து மேற்கண்ட சாலையை சீரமை க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள், வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை