உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் கண்காணிக்க வேண்டும்: பி.டி.ஓ.,

குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் கண்காணிக்க வேண்டும்: பி.டி.ஓ.,

திருத்தணி:ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் குடிநீர் பிரச்னை ஏற்படாமல் கண்காணித்து செயல்பட வேண்டும் என, ஊராட்சி செயலர்கள், பம்ப் ஆப்பரேட்டர்களுக்கு, வட்டார வளர்ச்சி அலுவலர் அறிவுறுத்தி உள்ளார்.திருத்தணி ஒன்றியத்தில், மொத்தம் 27 ஊராட்சிகள் உள்ளன. இதில், பெரும்பாலான ஊராட்சிகளில் குடிநீர் மோட்டார் பழுது, குழாய் சேதம் மற்றும் பம்ப் ஆப்பரேட்டர்கள் முறையாக குடிநீர் வினியோகம் செய்யாததால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது.இதனால், பெரும்பாலான கிராமங்களில் குடிநீர் கிடைக்காமல் மக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது.இதன் எதிரொலியாக, நேற்று திருத்தணி ஒன்றிய அலுவலகத்தில் கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தானம், ஊராட்சி செயலர்கள் மற்றும் பம்ப் ஆப்பரேட்டர்களை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தினார்.இதில், வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தானம் பேசியதாவது:ஊராட்சி செயலர்கள் மற்றும் குடிநீர் வினியோகம் செய்வோர் ஒன்றிணைந்து, குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் கண்காணிக்க வேண்டும். மின்மோட்டார் பழுது, குழாய்கள் சேதம் போன்றவற்றை உடனுக்குடன் சீரமைத்து, தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்.மொத்தத்தில் 27 ஊராட்சிகளிலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் ஊராட்சி செயலர்கள், பம்ப் ஆப்பரேட்டர்கள் கண்காணித்து, குடிநீர் பிரச்னையை தீர்க்க வேண்டும். குடிநீர் வினியோகம் செய்வதில் அலட்சியம் காட்டும் ஊராட்சி செயலர், பம்ப் ஆப்பரேட்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ