உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தண்ணீர் கேட்பதுபோல் பெண்ணின் செயின் பறிப்பு

தண்ணீர் கேட்பதுபோல் பெண்ணின் செயின் பறிப்பு

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி கிரிஜா, 63. இவர், நேற்று காலை வீட்டில் தனியாக இருந்தார். அப்போது டூ - வீலரில் வந்த மர்ம நபர், அவரிடம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார்.தண்ணீர் கொடுத்து திரும்பும்போது, அவர் அணிந்திருந்த 5 சவரன் செயினை மர்ம நபர் பறித்துக்கொண்டு டூ - வீலரில் தப்பி சென்றார். இந்த சம்பவத்தால், மாதர்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாதிரிவேடு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை