மேலும் செய்திகள்
முன்னாள் படை வீரர்கள் வாரிசுக்கு கல்வி நிதியுதவி
26-Sep-2024
திருவள்ளூர்:காக்களூர் தொழிற்பேட்டையில் காலியாக உள்ள மனையில், தொழிற்சாலை அமைக்க விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:தமிழ்நாடு 'சிட்கோ' நிறுவனத்திற்கு சொந்தமான, திருவள்ளூர் தாலுகா, காக்களூர் தொழிற்பேட்டையில், ஒரு காலி மனை உள்ளது. புதிதாக தொழில் தொடங்க தொழிற்மனை அமைக்க விரும்புவோர் http://www.tansidco.tn.gov.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.மேலும், தமிழகத்தில், 'சிட்கோ'விற்கு சொந்தமாக அமைந்துள்ள தொழிற்பேட்டைகளின் காலிமனைகளின் விவரத்தையும் இதே இணையத்தில் தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம். காலி மனையை பார்வையிட, கிளை மேலாளரான மகேஸ்வரியை, 94450 06568 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
26-Sep-2024