கேன்டீன் சாம்பாரில் செத்து கிடந்த பல்லி
திருவாரூர்:திருவாரூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், தனியார் நடத்தும் உணவகத்தில், உள்நோயாளி ஒருவருக்கு நேற்று, அவரது உறவினர் இட்லி வாங்கியுள்ளார். இட்லியில் சாம்பார் ஊற்றியபோது, அதில் இருந்து பல்லி விழுந்துள்ளது. அதிர்ச்சி அடைந்த அவர்கள், உணவகத்தில் முறையிட்டனர்.மருத்துவக்கல்லுாரி அதிகாரிகள் விசாரித்து, உணவுத் துறைக்கு தகவல் கொடுத்தனர். உணவுத் துறை அதிகாரிகள் உணவு மாதிரியை சேகரித்து மருத்துவ கல்லுாரி ஆய்வகத்திற்கு அனுப்பினர். உணவகத்திற்கு, 'சீல்' வைக்கப்பட்டது.