உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவாரூர் / கிண்டல் செய்த தகராறில் வாலிபர் அடித்து கொலை

கிண்டல் செய்த தகராறில் வாலிபர் அடித்து கொலை

திருவாரூர்: கிண்டல், கேலி பேசிய தகராறில், வாலிபர் கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். திருவாரூர் அருகே புதுார் கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்செல்வன். இவரது மகன் மணிகண்டன், 30; திருமணமாகாதவர். அதே ஊரை சேர்ந்தவர் வெங்கடேஷ், 29. இவரை, நேற்று மதியம், மணிகண்டன் கிண்டல் செய்துள்ளார். இதில், வெங்கடேஷ் ஆத்திரத்தில் இருந்துள்ளார். நேற்று மாலை, 5:30 மணிக்கு, மணிகண்டன் வீட்டிற்கு, வெங்கடேஷ் சென்றுள்ளார். அங்கு, மணிகண்டன் துாங்கி கொண்டிருந்தார். அப்போது, மணிகண்டனை, கட்டையால் தாக்கியதில், அவர், அதே இடத்தில் இறந்தார். இருவரும் குடிபோதையில் இருந்துள்ளனர். திருவாரூர் தாலுகா போலீசார், வெங்கடேஷை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ