கிணற்றில் மூழ்கி இருவர் பலி
துாத்துக்குடி: கோவில்பட்டி அருகே கிணற்றில் குளிக்க சென்ற 7ம் வகுப்பு மாணவர்கள் இருவர் மூழ்கி பலியாயினர்.துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தாமஸ் நகரை சேர்ந்த ராஜா மகன் ஆகாஷ் 14. பூசாரிபட்டியைச் சேர்ந்த அந்தோணி மகன் ஜான் 14. இருவரும் அங்குள்ள தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்தனர். நேற்று விடுமுறையால் கூசாலிப்பட்டியில் உள்ள விவசாய கிணத்தில் குளிக்க சென்றனர். பம்புசெட் அறையில் இருந்து கிணற்றில் குதித்த போது ஒருவர் மீது மற்றொருவர் விழுந்ததால் இருவரும் நீரில் மூழ்கி பலியாயினர். தீயணைப்பு வீரர்கள் அவர்களது உடல்களை மீட்டனர். நாலாட்டின்புதூர் போலீசார் விசாரித்தனர்.