உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / தொடர்ந்து விரிசல் ஏற்படும் பாலம் அடிக்கடி பஞ்சராகும் வாகனங்கள்

தொடர்ந்து விரிசல் ஏற்படும் பாலம் அடிக்கடி பஞ்சராகும் வாகனங்கள்

துாத்துக்குடி: துாத்துக்குடி --- மதுரை இடையே மாநில நெடுஞ்சாலையாக இருந்த, 149 கி.மீ., சாலை, 2007ல் நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்தப்பட்டு, தேசிய நெடுஞ்சாலையாக மாறியது. மதுரையில் இருந்து துாத்துக்குடி துறைமுகம், திருச்செந்துார் முருகன் கோவிலுக்கு வருவோர் இந்த சாலையை அதிகம் பயன்படுத்துகின்றனர்.துாத்துக்குடி துறைமுகத்தில் இருந்து மதுரை, சென்னை, விசாகப்பட்டினம் போன்ற பெருநகரங்களுக்கு கனரக வாகனங்கள் அதிகம் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த சாலையில், எட்டையபுரம் அருகே முத்துலாபுரம் வைப்பாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலத்தில் அடிக்கடி ஏற்படும் விரிசல் காரணமாக வாகனங்கள் பஞ்சராகும் நிலை ஏற்பட்டுள்ளது.கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவர் வரதராஜன், மதுரையில் உள்ள தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்ட இயக்குனருக்கு அனுப்பியுள்ள மனு:முத்துலாபுரம் வைப்பாற்றின் குறுக்கை கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலத்தின் குறுக்கே, 10 மீட்டருக்கு ஒரு இரும்பு ராடு பொருத்தப்பட்டுள்ளது. பாலம் கட்டப்பட்ட நாள் முதல் தற்போது வரை ஒவ்வொரு தடுப்புற்கிற்கும் இடையில் உள்ள இரும்பு ராடுகளுக்கும், கான்கிரீட்டுக்கும் அவ்வப்போது விரிசல் ஏற்பட்டு வருகிறது.தற்காலிகமாக அதை சரி செய்தாலும் மீண்டும் கான்கிரீட் உடைப்பு ஏற்படுகிறது. இந்நிலையில், தெற்கிலிருந்து வடக்கு நோக்கி வரும் பாலத்தின் முடிவில் இரும்பு ராடு விரிசல் ஏற்பட்டும், கான்கிரீட்டில் உள்ள இரும்பு கம்பிகள் வெளியே நீட்டி கூர்மையாகவும் உள்ளன.இவை, அவ்வழியே செல்லும் வாகனங்களின் டயர்களை பதம் பார்த்து, பஞ்சராகி விபத்துக்குள்ளாகுகின்றன. இவற்றை நிரந்தர தீர்வாக சரி செய்வது கிடையாது. இதனால் தினமும் வாகனங்கள் பஞ்சராகி சாலையோரம் காட்சி பொருளாக நிற்கின்றன. 24 மணி நேரமும் வாகனங்கள் இயங்கக்கூடிய இச்சாலையின் முக்கியத்துவம் கருதி, விரிசலை சரி செய்ய வேண்டும்.இவ்வாறு கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

king Jesse
அக் 29, 2024 11:10

அதுவரை டோல் ரூபாய் வாங்காதீங்க


king Jesse
அக் 29, 2024 11:08

அதுவரை டோல் வாங்காதீங்க


Jaya Ram
அக் 29, 2024 10:54

அய்யா நிரந்தர தீர்வு என்றால் எப்படி, நம்மவர்களுக்கு அதுபற்றி என்னவென்றே தெரியாது. அப்படியே யாராவது யோசனை சொன்னால் அவர் அந்த இடத்தில் இருந்து மாற்றப்படுவார். இப்போ பாருங்க சென்னையில் இருந்து வெளியூர் செல்வதற்கு போக்குவரத்து நெருக்கடியாக இருக்கிறது என்று பஸ் ஸ்டாண்டையே ஏறத்தாழ ஒரு 40 கிலோ மீட்டர் தூரத்துக்கு எந்த வசதியும் இல்லாமல் மாற்றி விட்டனர் இப்போ கோயம்பேடு பஸ்ஸ்டாண்ட் இடிக்கப் போகின்றனர் அதை கட்டி வெறும் 22 ஆண்டுகள் தான் ஆகின்றன. அப்படித்தான் இவர்களால் நிரந்தர தீர்வு காணப்படும். ஏன் அங்கிருந்து பஸ்கள் வெளியேற மாற்று வழி இல்லையா ஏற்கனவே ஒரு உயர்மட்ட பாலத்திற்க்காக பில்லர்கள் அமைத்து அது தடையின் காரணமாக அப்படியே கிடக்கிறது அதன் மீது பாளம்பொட்டால் அதுவானகரம் சென்று விடும் அங்கிருந்து நசரத்பெட்டை சுற்றுசாலையில் பஸ்களை அனுப்பினால் அது வண்டலூர் தாண்டி கொண்டு போய்விடும், திருவிழக்காலங்களில் ஶ்ரீபெரும்புதூர் டு சிங்கபெருமால சாலையில் திருப்பி விடலாம் அல்லது செங்கள்பட்டுக்கே கொண்டுசெல்லும் சாலையிலும் திருப்பி விடலாம் இது வருடத்தில் ஒரு நான்கு தடவை மட்டுமே செய்ய வேண்டிய செயல், மற்றபடி பெருங்களத்தூர், வண்டலூர் சுற்று சாலைகளை மட்டும் போதும், அதை விடுத்து மக்களை அலைக்களிப்பதில் என்ன நியாயம், இப்போ இடிக்கப்படும் இந்த கோயம்பேடு எவ்வளவு செலவில் மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்டது அவ்வளவையும் வீணடிக்கும் அரசுகள். இப்போ இந்தப்பாலத்தையும் இடித்து விட்டு புதுப்பாளம் கட்டுவோம் என்பார்கள் கையாலாகாத அதிகாரிகளும், அரசுகளும் மக்களின் வர்ப்பணத்தை வீணடிக்க அஞ்சமாட்டர்கள்


Ram
அக் 28, 2024 06:13

மேக் இன் இந்தியா


Gajageswari
அக் 28, 2024 05:21

இப்படி ஒரு பாலம் மிகவும் கேவலமாக உள்ளது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை