உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / மாணவிக்கு பாலியல் சீண்டல் கல்லுாரி பேராசிரியர் கைது

மாணவிக்கு பாலியல் சீண்டல் கல்லுாரி பேராசிரியர் கைது

துாத்துக்குடி,:விளையாட்டுப் போட்டிக்கு அழைத்துச் சென்ற இடத்தில் கல்லுாரி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பேராசிரியரை போலீசார் கைது செய்தனர்.துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர், திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லுாரில் உள்ள கல்வியியல் கல்லுாரியில் பி.எட்., இரண்டாமாண்டு படிக்கிறார். வாலிபால் வீராங்கனையான அவர், கடந்த மாதம் நாகர்கோவிலில் நடந்த போட்டியில் கலந்து கொண்டார்.மாணவிக்கு துணையாக அக்கல்லுாரி பேராசிரியர் ரவி, 41, என்பவரும் சென்றார். மாணவி அறையில் தனியாக இருந்தபோது பேராசிரியர் ரவி பாலியல் சீண்டலில் ஈடுபட்டாராம். மேலும், அவரது கார் டிரைவர் ஷியாம், 31, என்பவரும் மாணவியிடம் தவறாக நடக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.பாதிக்கப்பட்ட மாணவி தனக்கு நேர்ந்த கொடுமையை வீட்டில் உள்ளவர்களிடம் தெரிவித்தார். அவர்கள் அறிவுறுத்தலின்படி, ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று மாணவி புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் பேராசிரியர் ரவியை கைது செய்தனர். கார் டிரைவர் ஷியாமை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி