போலீஸ்காரரை கல்லால் தாக்கிய மூவர் கைது
நாட்றம்பள்ளி:திருப்பத்துார் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் சபரி 29. இவர் சென்னையில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை போலீஸ்காரராக பணிபுரிகிறார். பொங்கலை கொண்டாட சொந்த ஊருக்கு வந்தார். ஜன.,15 அவருக்கும், அதே பகுதியில் மது அருந்திய திருமலை வாசன், 25, விஜய், 28, புஷ்பாராஜ், 25, தகராறு ஏற்பட்டது. மூவரும் கல்லால் தாக்கியதில் சபரி படுகாயமடைந்தார். மூவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.