உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உடுமலையில் போலீசார் குறைதீர் கூட்டம்

உடுமலையில் போலீசார் குறைதீர் கூட்டம்

உடுமலை : உடுமலையில், திருப்பூர் மாவட்ட எஸ்.பி., தலைமையில், குறைதீர் கூட்டம் இரண்டு நாட்கள் நடக்கிறது. திருப்பூர் மாவட்ட எஸ்.பி., பாலகிருஷ்ணன் நாளை (16ம் தேதி) அமராவதி நகர் மற்றும் சுற்றுப்புற கிராம மக்களை சந்தித்து குறைகளை கேட்க உள்ளார். தொடர்ந்து, 17ம் தேதி உடுமலை டி.எஸ்.பி., அலுவலகத்தில், காலை 8.00 மணிமுதல் 9.00 மணி வரை காவல் ஆளினர்களின் (காவல்துறையில் பணியாற்றுபவர்கள்) குறைகளையும்; 9.00 மணிமுதல் 12.00 மணிவரை உடுமலை மற்றும் சுற்றுப்பகுதி மக்களின் குறைகளை கேட்க உள்ளார். மக்கள் தங்கள் குறைகளை நேரடியாக மனுவாகவோ, வாய்மொழியாகவோ தெரிவிக்கலாம். இத்தகவலை உடுமலை டி.எஸ்.பி., செந்தில் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ