உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மிதியடி தயாரிக்க இயந்திரம்: மலைகிராமத்தில் எதிர்பார்ப்பு

மிதியடி தயாரிக்க இயந்திரம்: மலைகிராமத்தில் எதிர்பார்ப்பு

உடுமலை; மானியத்தில், மிதியடி தயாரிக்கும் இயந்திரத்தை அரசு வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும் என மலைவாழ் கிராம பெண்கள் தெரிவிக்கின்றனர்.ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை, அமராவதி வனசரகத்தில், 13க்கும் மேற்பட்ட மலைவாழ் குடியிருப்புகள் உள்ளன. இங்கு வசிக்கும் மக்கள், வனத்தில், சீமாறு புல் உட்பட பொருட்களை சேகரித்து, விற்பனை செய்வதன் வாயிலாக கிடைக்கும் குறைந்தளவு வருவாயை மட்டுமே தங்கள் வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர்.பல மாதங்கள் குறைந்தளவு வருவாயும் கிடைக்காமல், அவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, மலைவாழ் மக்களுக்கு சுய தொழில் கற்றுத்தர பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.அதில், மத்திய கயிறு வாரியம் வாயிலாக, தென்னை நாரில் கால் மிதியடி தயாரிக்கும் பயிற்சி ஊக்கத்தொகையுடன் வழங்கப்பட்டது.இப்பயிற்சியை கரட்டுப்பதி, தளிஞ்சி, கோடந்துார், நல்லாறு காலனி உட்பட குடியிருப்புகளை சேர்ந்த 400 க்கும் அதிகமான பெண்கள் பெற்றுள்ளனர். ஆனால், இத்தொழிலை தொடர்ந்து மேற்கொள்ள, அவர்களுக்கு கால் மிதியடி தயாரிப்பதற்கான இயந்திரம் இல்லை.இதனால், பயிற்சி பெற்றும் சிறு தொழிலை துவக்க முடியாத நிலை உள்ளது. 'தென்னை நார் வாயிலாக மிதியடி தயாரிப்பதால், நிலையான வருவாய் கிடைக்கும் வாய்ப்புள்ளது.மிதியடி தயாரிக்கும் இயந்திரம் மற்றும் மூலப்பொருள் கொள்முதல் செய்ய அரசு உதவ வேண்டும். தொழில் துவங்க கடனுதவி வழங்கினால், பயனுள்ளதாக இருக்கும்,' என அப்பகுதி மலைவாழ் கிராம பெண்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை