உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அத்திக்கடவு - அவிநாசி திட்டம்; சித்திரை தீர்த்தக்குட யாத்திரை

அத்திக்கடவு - அவிநாசி திட்டம்; சித்திரை தீர்த்தக்குட யாத்திரை

அவிநாசி : அவிநாசி, சேவூர் ரோட்டில் உள்ள கொங்கு கலையரங்கில், அத்திக்கடவு - அவிநாசி திட்ட போராட்ட குழுவினர் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில், 10ம் ஆண்டாக நடைபெறும் சித்திரை 1ம் தேதி தீர்த்த குட யாத்திரையை சிறப்பாக நடத்துவது, அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் விடுபட்டுள்ள அனைத்து குளம் மற்றும் குட்டைகளுக்கு தண்ணீர் வரும் வரை தீர்த்த குட யாத்திரை தொடரும்; அத்திக்கடவு திட்டம் - 2.0க்கான ஆய்வுகளை நடத்தி விரைவாக செயல்படுத்திட வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அத்திக்கடவு - அவிநாசி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி