உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விபத்தில் முதியவர் பலி

விபத்தில் முதியவர் பலி

திருப்பூர் : திருப்பூரை அடுத்த ஊத்துக்குளி, குமரன் நகரை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி, 60. கடந்த, 8ம் தேதி மாலை இவர் தனது பேத்தியை பள்ளியில் இருந்து அழைத்து வருவதற்காக டூவீலரில் சென்றார். சேலம் - பைபாஸ் ரோடு ஓடக்காடு பிரிவு அருகே டூவீலரில் சென்ற போது, அவ்வழியாக வந்த மற்றொரு டூவீலர் மோதி விபத்து ஏற்பட்டது. படுகாயமடைந்த அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். ஊத்துக்குளி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை