காலாவதி பொருள்; கடைக்கு அபராதம்
பல்லடம்: நேற்று முன்தினம், பல்லடம் கடைவீதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் வாங்கிய பாக்கெட் உணவுப் பொருட்களில் சில, காலாவதியான பின்னரும் விற்பனை செய்யப்பட்டன. பனப்பாளையத்தைச் சேர்ந்த நுகர்வோர் ஒருவர் தெரிவித்த புகாரின் பேரில், உணவு பாதுகாப்பு துறை வட்டார அலுவலர் கிருஷ்ணமூர்த்தி ஆய்வு செய்தார். கடைக்கு 3 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்.