உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரூ.1.10 கோடி பறிப்பு வழக்கு மேலும், ஒருவர் கைது

ரூ.1.10 கோடி பறிப்பு வழக்கு மேலும், ஒருவர் கைது

திருப்பூர்: கரூர், கீழநஞ்சையை சேர்ந்தவர் வெங்கடேஷ், 60; நகை வியாபாரி. கடந்த, 4ம் தேதி மாலை கோவையில் நகை வாங்க கரூரில் இருந்து காரில் கிளம்பி வெங்கடேஷ் மற்றும் கார் டிரைவர் ஜோதிவேல், 54 ஆகியோரை வழிமறித்த கும்பல், போலீஸ் எனக்கூறி, ஒரு கோடியே, 10 லட்சம் ரூபாய் மற்றும் மொபைல் போன்களை பறித்து சென்றனர். பல்வேறு கட்ட விசாரணைக்கு பின், ஜோதிவேல், அவரது நண்பர் தியாகராஜன், 41 மற்றும் பிளஸ் 2 மாணவர் உட்பட, ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். வழக்கில் தொடர்புடைய சிலரை போலீசார் தேடி வந்த நிலையில், நேற்று குளித்தலையை சேர்ந்த ஜாகீர் உசேன், 25 என்பவரை கைது செய்து, கார், இரண்டு மொபைல் போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுவரை, 95 லட்சம் ரூபாயை போலீசார் மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை