உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நாய்கள் கடித்து 10 ஆடுகள் பலி

நாய்கள் கடித்து 10 ஆடுகள் பலி

காங்கயம்: ஊதியூர், புதுப்பாளையத்தை சேர்ந்தவர் முத்துகுட்டி, 65; விவசாயி. நேற்று முன்தினம் இரவு, 35 ஆடுகளை தோட்டத்து பட்டியில் அடைத்து வைத்திருந்தார்.நேற்று அதிகாலை தோட்டத்துக்குள் புகுந்த வெறிநாய் கும்பல், பட்டியில் இருந்த, 13க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை கடித்துள்ளது.இதில், பத்து செம்மறி ஆடுகள் இறந்தன. மேலும், 9 ஆடுகள் படுகாயமடைந்தன. இதுகுறித்து கால்நடைதுறை மற்றும் ஊதியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ