போலீஸ் குறித்து கிண்டல் 3 பனியன் தொழிலாளி கைது
திருப்பூர்,; இடுவாயை சேர்ந்தவர் மருதமுத்து, 43, பனியன் தொழிலாளி. இவரது நண்பர்கள் பிரகாஷ், 24, மோகன்ராஜ், 24 ஆகியோருடன் சேர்ந்து போலீசார் குறித்து கிண்டல் செய்து சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர்.அதில், வாகன தணிக்கையில் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்தாமல் இருக்க, ஆயிரம் ரூபாய் கேட்பது போல் சித்தரிக்கப்பட்டு இருந்தது.இதுதொடர்பாக ஆயுதப்படை போலீஸ்காரர் புகாரின் பேரில், சென்ட்ரல் போலீசார் மூன்று பேரையும் கைது செய்தனர்.