மேலும் செய்திகள்
சிக்கண்ணா கல்லுாரி; கவுன்சிலிங் தேதி அறிவிப்பு
31-May-2025
திருப்பூர்; சிக்கண்ணா கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் அறிக்கை:கல்லுாரியில் மொத்தமுள்ள, 1,008 இளங்கலை இடங்களுக்கு, முதல் கட்ட கவுன்சிலிங்கில்,898 இடங்கள் நிரம்பியுள்ளது.இனி, ஜூன், 30ம் தேதிக்கு பின் விண்ணப்பித்த, விடுபட்ட மாணவ, மாணவியருக்கு கல்லுாரி கல்வி இயக்குனரகத்தில் உத்தரவை பின்பற்றி கவுன்சிலிங் நடக்கும்; அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.தற்போது கல்லுாரியில், வரலாறு, தமிழ் இலக்கியத்தில் ஒன்று, ஆங்கில இலக்கியத்தில், 17, வணிகவியலில் நான்கு(எஸ்.டி., பிரிவினருக்கு மட்டும்), விலங்கியலில், 10, கணினி அறிவியல் (இரண்டாம் சுழற்சி) - 11, இயற்பியல் 15, வேதியியல் - 19, கணிதம் -32 என மொத்தம் 110 இடங்கள் உள்ளது.இரண்டாம் கட்டக் கவுன்சிலிங் அறிவிப்பு வந்தவுடன், இவற்றுக்கு கவுன்சிலிங் நடக்கும். முதலாம் ஆண்டு மாணவருக்கு வரும், 30ம் தேதி முதல் வகுப்புகள் துவங்குகிறது.
31-May-2025