உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆதார் சிறப்பு முகாம்; பொதுமக்கள் ஆர்வம்

ஆதார் சிறப்பு முகாம்; பொதுமக்கள் ஆர்வம்

அவிநாசி; அவிநாசி, மங்கலம் ரோட்டில் உள்ள ரோட்டரி அரங்கத்தில், அஞ்சல் துறை, ரோட்டரி அவிநாசி, ரோட்டரி அவிநாசி நெக்ஸ்ட் ஜெனரேஷன் ஆகியோர் இணைந்து ஆதார் சிறப்பு முகாம் நேற்று துவங்கியது. முகாமில் ஐந்து முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கைரேகைகள், கண் கருவிழி புதுப்பித்தல் மற்றும் புதிய ஆதார் பதிவு செய்தல் உள்ளிட்ட சேவைகளுக்கு கட்டணம் இல்லை. மூன்று நாள் நடக்கும் முகாமில், நேற்று, 120 பேர் பங்கேற்று பயன்பெற்றனர். ஆதார் சிறப்பு முகாமில், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம், பான்கார்டு, பேங்க் பாஸ்புக், பாஸ்போர்ட் ஆகியவற்றில், ஏதேனும் ஒன்றை புகைப்பட சான்றுக்காகவும், இருப்பிட சான்றுக்கு ஊராட்சித் தலைவர் அல்லது அரசு பதிவு பெற்ற அதிகாரியிடம் சான்றிதழ் பெற்று திருத்தம் மேற்கொள்ளலாம் என்றும், முகாம், 23ம் தேதி (நாளை) வரை நடப்பதாகவும் முகாம் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர் .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ