உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தாய் - தந்தையை காவு வாங்கிய விபத்து; பெற்றோரின்றி தவிக்கும் குழந்தைகள்

தாய் - தந்தையை காவு வாங்கிய விபத்து; பெற்றோரின்றி தவிக்கும் குழந்தைகள்

திருப்பூர்; ஆயிரம் கனவுகளோடு துவங்கிய அந்த பயணம், இப்படி பாதியில் முடியும் கனவிலும் நினைத்து பார்க்காத வகையில் நடந்து விட்டது. திருப்பூரில் அடுத்தடுத்த நாளில் நடந்த, இரு சாலை விபத்தில் தந்தை, தாயை இழந்து, குழந்தைகள் தவிக்கும் சோகம் மக்களை கண்ணீரில் ஆழ்த்துகிறது.தாராபுரம், ரங்கபாளையத்தை சேர்ந்தவர் கனகமணி, 40; பனியன் தொழிலாளி. கணவனை இழந்த அவர், மகன் விஷ்ணு, 17, அனுஸ்ரீ, 15 மகளுடன் வசித்து வந்தார். மகனின் பள்ளி கட்டணத்தை செலுத்த, மகனுடன் டூவீலரில் கனகமணி சென்றார். பின், வீட்டுக்கு திரும்பும் போது, மூலனுார் பொதுப்பணித்துறை உதவி கோட்ட பொறியாளர் இளம்பூரணம் வந்த கார், டூவீலர் மீது மோதியது. அதில், கனகமணி பரிதாபமாக இறந்தார்.காரை ஓட்டி வந்த டிரைவர் ஜெயக்குமார், 46 என்பவரை போலீசார் கைது செய்தனர். தனது கண் முன்னே, தாயை விபத்தில் பறிகொடுத்த மகன் மற்றும் தகவல் கேட்டு ஓடோடி வந்த தங்கையும் கதறி அழுத சம்பவம் கஞ்நெஞ்சக்காரர்களையும் உலுக்கியது. கடந்த, இரு ஆண்டுக்கு முன், இதே நாளில் விபத்து ஒன்றில் தந்தையை இழந்த இதே குடும்பம், கொஞ்சம் கொஞ்மாக மீண்டு வந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு விபத்தில் தாயையும் இழந்துள்ளனர்.

பெற்றோரை இழந்த மகள்

கேரளா மாநிலம், மூணாறை சேர்ந்தவர் ராஜா, 46. இவரது மனைவி ஜானகி, 40. தம்பதிக்கு ஹேமா நேத்ரா, 15, மவுனா ஷெரின், 11 என்ற, இரு மகள் உள்ளனர். நேற்று அதிகாலை கேரளாவில் இருந்து அரச்சலுார் செல்லும் போது, புளியமரத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. அதில், தம்பதி உட்பட, மூன்று பேர் பரிதாபமாக இறந்தனர். மவுனா ஷெரின் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். அடுத்தடுத்து நாளில் நடந்த இரு விபத்திலும், பெற்றோரை இழந்து, பிள்ளைகள் தவித்து வருவது திருப்பூர் மாவட்ட பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி