உள்ளூர் செய்திகள்

சங்க கூட்டம்

உடுமலை; முதியவர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க வேண்டும் என, ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க வட்டக்கிளை கூட்டம் நடந்தது. கூட்டத்தில், துணைத்தலைவர் ரகோத்தமன் தலைமை வகித்தார். செயலாளர் சாமிநாதன் முன்னிலை வகித்தார்.வயது முதியவர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்குதல், மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உள்ள குறைபாடுகளை நீக்குதல் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஹார்ட்புல்நஸ் அமைப்பின் சார்பில் ஆசிரியர்கள் கஜலட்சுமி, சாந்தாமணி தியானம் மற்றும் யோகா குறித்து செயல் விளக்கம் அளித்தனர். சங்க மாவட்ட பொறுப்பாளர்கள் உட்பட பலரும் பங்கேற்றனர். பொருளாளர் ராமமூர்த்தி நன்றி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை