உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உடுமலை திருப்பதி கோவிலில்  27ல் அவதார உற்சவம் துவக்கம்

உடுமலை திருப்பதி கோவிலில்  27ல் அவதார உற்சவம் துவக்கம்

உடுமலை; உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவிலில், ஏழாம் வருடாரம்ப அவதார உற்சவம், வரும், 27ல் துவங்குகிறது.இந்த உற்சவம், வரும் 27ம் தேதி காலை, 7:00 மணிக்கு மேல், விஷ்வக்ேஷனர், லட்சுமி ஹயக்ரீவர், சக்கரத்தாழ்வார், லட்சுமி நரசிம்மர், தன்வந்திரி பெருமாள், கருடாழ்வார் மற்றும் ஆஞ்சநேயர் திருமஞ்சனத்துடன் துவங்குகிறது.காலை, 8:30 மணிக்கு மேல், புற்றுக்கோவிலில் இருந்து பால் குடம் புறப்படுதல், ரேணுகாதேவி திருமஞ்சனம் நடைபெறுகிறது. மாலை, 4:30 மணி முதல், 6:30 மணி வரை, ஸ்ரீ பத்மாவதி தாயார் மற்றும் ஸ்ரீ ஆண்டாள் திருமஞ்சனம் நடக்கிறது. வரும், 28ம் தேதி, 7ம் ஆண்டு அவதார உற்சவம் நடக்கிறது. அன்று காலை, 7:00 மணி முதல் ேஹாமம், நவகலச ஸ்தாபிதம், வேங்கடேச பெருமாள் மூலவர் உற்சவர் திருமஞ்சனம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ