அவிநாசி தெப்பத்தேர்
அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் சித்திரைத் தேர்த்திருவிழாவில், 12வது நாள் உற்சவமாக, தேவர் சமூக திருமண மண்டப அறக்கட்டளை சார்பில் நேற்று தெப்பத்தேர் விமரிசையாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீஆனந்தவல்லி தாயார் சமேத சந்திரசேகர பெருமான், தெப்பக்குளத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.