உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆயுத பூஜை கழிவு ஆயிரம் டன்

ஆயுத பூஜை கழிவு ஆயிரம் டன்

திருப்பூர்: ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை கழிவுகள் திருப்பூர் மாநகராட்சி சுகாதாரப்பிரிவுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. கடந்த, 9 மற்றும், 10ம் தேதி வீடு, பனியன் நிறுவனங்களை சுத்தம் செய்த போது, அவற்றில் இருந்து வெளியேற்றப்பட்ட குப்பை, பல பகுதிகளில் தொட்டிகளில் நிறைந்தது.வழக்கமாக வீட்டு கழிவு, ஓட்டல் கழிவுகளுடன் இவையும் சேர்ந்த நிலையில், குப்பை அளவு, 11ம் தேதியே, 800 டன்னாக அதிகரித்தது. இவற்றை இருமுறை அகற்று முன்பாக, நேற்று காலை குப்பை அளவு அதிகரித்தது. ஆயுத பூஜை விற்பனையை எதிர்பார்த்து விற்பனைக்கு வாழைமரம், மாவிலை, பூக்கள் கொண்டு வரப்பட்டிருந்தது. இரவு வரை விற்பனையாகாத பொருட்களை அங்காங்கே அப்படியே வியாபாரிகள் விட்டுச் சென்றனர்.இதனால், முக்கிய சந்திப்புகளில் ஆயுதபூஜை கழிவுகள் அப்படியே தேங்கியுள்ளது. இதனால், மாநகராட்சி அகற்ற வேண்டிய குப்பை அளவு, ஆயிரம் டன்னை எட்டி பிடித்துள்ளது. பூ மார்க்கெட் பின், 100 மீ., துாரத்துக்கு, ஒரு டன்னுக்கு மேல் குப்பை குவிந்து கிடக்கிறது. அவ்வப்போது மழை பெய்து வருவதால், குப்பைகள் நனைந்து துர்நாற்றம் வீசுகிறது. சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.மக்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், குப்பைகளை உடனடியாக அகற்ற வேண் டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.மாநகராட்சி சுகாதாரப்பிரிவு அதிகாரிகள் கூறுகையில், 'ஆயுதபூஜை முடிந்து இரண்டு நாட்களும் குப்பை எடுக்கும் ஊழியருக்கு சிறப்பு பணி வழங்கப்படும். நேற்றே நான்கு மண்டலத்திலும், அதிக குப்பை தேங்கிய பகுதிகள் அடையாளம் காணப்பட்டு, டிராக்டர், லாரிகள் மூலம் குப்பை அகற்றும் பணி துவங்கப்பட்டு விட்டது. இன்று (ஞாயிறு) விடுமுறை. தேங்கியுள்ள குப்பைகள் இரண்டு நாட்களுக்கும் முழுமையாக அகற்றப்பட்டு விடும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

kuruvi
அக் 13, 2024 07:18

குப்பையை பணமாக்க கெல்வின் இந்தியா என்ற கம்பனியின் வீடியோவை பார்க்கவும் .குப்பை அனைதும் பணமாக்களாம். சுயதொழில் செய்யவிரும்பும் படித்த இளஞ்ர்கள் முயற்சிக்கவும்.


kuruvi
அக் 13, 2024 06:59

இந்த குப்பையில் முழுவதும் பணம் நிறைந்து இருக்கிறது. இதை மக்தவைத்து ஆர்கானிக் உறமாக்களாம். எல்லா பயிர்வகைகளுக்கும் , காய் கறி திட்டங்களுக்கும் உரமாக பயன்படுத்தலாம். இதற்க்கு ஓரிரு நாளில் மக்கவைக்கும் மின்சாரத்தால் இயங்கும் மெஷின் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகிறது.யாராவது முன்னெடுத்து செய்யவேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை