உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / போனஸ் பட்டுவாடா துவங்கியது பனியன் தொழிலாளர்கள் மகிழ்ச்சி

போனஸ் பட்டுவாடா துவங்கியது பனியன் தொழிலாளர்கள் மகிழ்ச்சி

திருப்பூர்: பனியன் தொழிலாளருக்கு போனஸ் பட்டுவாடா துவங்கிவிட்-டது. தீபாவளி பண்டிகைக்கு ஆடை, வீட்டு உபயோக பொருள் வாங்க வந்தவர்களால் கடை வீதிகள் நேற்று மக்கள் கூட்டத்தால் அலைமோதியது.தீபாவளி பண்டிகை, 20ம் தேதி கொண்டாடப்படுகிறது. தொழி-லாளருக்கு, சனிக்கிழமை சம்பளத்துடன் சேர்த்து போனஸ் வழங்-குவது திருப்பூரில் வழக்கம். அதன்படி, நேற்று முன்தினம் சம்-பளம் வழங்கும் போது, 20 சதவீத நிறுவனங்கள் போனஸ் வழங்-கியுள்ளன.அதாவது, அமெரிக்க ஆர்டர் இழப்பால் பாதித்த நிறுவனங்கள், முன்கூட்டியே போனஸ் கொடுத்து, தொழிலாளர்களுக்கு, 10 முதல் 15 நாட்கள் வரை, தீபாவளி பண்டிகை விடுமுறை அளிக்க திட்டமிட்டுள்ளன. வரும், 11ம் தேதி சம்பளத்துடன், 70 சதவீத தொழிலாளருக்கு போனஸ் வழங்கி முடிக்கப்படும்; மீதியுள்ள தொழிலாளருக்கு 15ம் தேதிக்கு பிறகு வழங்க, சில நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.அவசரமாக முடிக்க வேண்டிய ஆர்டர்கள் இருப்பதால், தொழி-லாளரை தக்க வைக்க வேண்டி, 15ம் தேதிக்கு பிறகு, பனியன் நிறுவன அலுவலர், பணியாளர் மற்றும் தொழிலாளருக்கு போனஸ் வழங்க ஏற்பாடு செய்துள்ளனர். இருப்பினும், போனஸ் பட்டுவாடா துவங்கிவிட்டதால், அதனை கொண்டு தீபாவளி 'பட்-ஜெட்'டை நிறைவேற்ற தொழிலாளர் குடும்பங்கள் தயாராகிவிட்-டன. இதனிடையே ஜவுளி எடுக்க வந்த மக்கள், காதர்பேட்டை பகுதிகளில் உள்ள பனியன் பஜாரில், பின்னலாடைகள், இரவு நேர ஆடைகள், உள்ளாடைகள் வாங்கவும் குவிந்தனர். இதனால், நஞ்சப்பா ரோடு பகுதியிலும் கூட்டம் அலைமோதியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை