உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பில்ட் எக்ஸ்போ - 2025 நாளையுடன் நிறைவு 

பில்ட் எக்ஸ்போ - 2025 நாளையுடன் நிறைவு 

திருப்பூர் : திருப்பூரில், கட்டட பொறியாளர் சங்கம் சார்பில் நடைபெறும் கட்டுமானப் பொருள் கண்காட்சி நாளை நிறைவடையவுள்ளது.திருப்பூர் மாவட்ட கட்டட பொறியாளர் சங்கம் சார்பில், கட்டுமானப் பொருள் கண்காட்சி, 'பில்ட் எக்ஸ்போ 2025' கடந்த 11ம் தேதி துவங்கியது.காங்கயம் ரோடு காயத்ரி மஹாலில் துவங்கிய இக்கண்காட்சியில், 160 நிறுவனங்கள் அரங்கு அமைத்துள்ளன. கட்டடங்கள் கட்ட தேவையான அனைத்து விதமான கட்டுமானப் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனங்கள் அரங்கு அமைத்துள்ளன.மேலும் அனைத்து பயன்பாடு கட்டடங்களுக்கான எக்ஸ்டீரியர் மற்றும் இண்டீரியர் டிசைன்களுக்கான நிறுவனங்கள்; பர்னிச்சர், எலக்ட்ரிகல், டைல்ஸ், மார்பிள்ஸ், அலங்கார பொருட்கள் விற்பனை அரங்குகள் இடம் பெற்றுள்ளன. காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை நடைபெறும் கண்காட்சிக்கு அனுமதி இலவசம்.மேலும், குழந்தைகளுக்கான பிளே ஜோன்,இலவச மருத்துவ ஆலோசனை மையங்களும் உள்ளன. குலுக்கல் முறையில் அதிர்ஷ்டசாலிகள் தேர்வு செய்து ஆச்சரியப் பரிசுகளும் வழங்கப்படுகிறது.கடந்த, 11ம் தேதி துவங்கிய இக்கண்காட்சியை கடந்த இரு நாட்களாக பல்லாயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர். இன்று, 3வது நாளாக நடைபெறும் இக்கண்காட்சி நாளை (14ம் தேதி) நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி