உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நாளை மதுக்கடைகளை மூட கலெக்டர் உத்தரவு

நாளை மதுக்கடைகளை மூட கலெக்டர் உத்தரவு

உடுமலை; திருப்பூர் மாவட்டத்தில், நாளை (10ம் தேதி) மதுக்கடைகள் மற்றும் பார்களை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில், நாளை (10ம் தேதி), மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, டாஸ்மாக் மதுக்கடைகளுடன் இயங்கி வரும் பார்கள் ( எப்.எல்.,1) மற்றும் மனமகிழ் மன்றங்கள் (எப்.எல்.,2) உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்படும் அரசு உரிமம் பெற்ற மதுபான கூடங்கள் (எப்.எல்.,3) ஆகியவை அனைத்தும், அன்றைய நாள் முழுவதும் மூடப்பட்டு, மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது, என உத்தரவிடப்படுகிறது.மீறுபவர்கள் மீது, உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி