நுகர்வோர் காலாண்டு கூட்டம் ரத்து
திருப்பூர்; திருப்பூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு காலாண்டு கலந்தாய்வு கூட்டம், கலெக்டர் தலைமையில் நேற்று மாலை, 3:00 மணிக்கு நடப்பதாக அறிவிக்கப்பட்டு, நுகர்வோர் அமைப்பினருக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. அதன்படி, கலெக்டர் அலுவலகத்தில், கூட்டம் நடத்துவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கூட்டத்தில் பங்கேற்ற சங்க பிரநிதிநிதிகள், மாவட்ட கலெக்டர் தலைமையில் தான் காலாண்டு கூட்டம் நடத்த வேண்டும் என, கூறியதன் விளைவாக, அதிகாரிகள் கூட்டத்தை வேறு ஒரு தேதிக்கு ஒத்திவைத்தனர்.