உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குடிநீர் தொட்டி இடியும் அபாயம்; பகலில் தெரு விளக்கு எரியும் அவலம்

குடிநீர் தொட்டி இடியும் அபாயம்; பகலில் தெரு விளக்கு எரியும் அவலம்

மின்சாரம் வீண்திருப்பூர், கோவில்வழி பஸ் ஸ்டாண்டில் பகலில் தெருவிளக்குகள் எரிந்து மின்சாரம் வீணாகிறது. மின்விளக்குகளை சரியான நேரத்துக்கு அணைத்து மின்சாரத்தை சேமிக்க வேண்டும்.- ராஜகுரு, கோவில்வழி. (படம் உண்டு)அவிநாசி, தபால் அலுவலகம் முன் உள்ள கம்பத்தில், பகலிலும் தெருவிளக்கு எரிந்து மின்சாரம் வீணாகிறது.- சண்முகசுந்தரம், அவிநாசி. (படம் உண்டு)கிளைகளை வெட்டுங்கள்சங்கிலிபள்ளம் ஓடை, தரைப்பாலம் அருகே வைக்கப்பட்டுள்ள, நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு பலகையில் ஊர் பெயர் தெரியாத அளவு அதிகமாக மரங்கள் வளர்ந்துள்ளது. நெடுஞ்சாலைத்துறையினர் கவனத்து கிளைகளை வெட்ட வேண்டும்.- பிரணவ், தாராபுரம் ரோடு. (படம் உண்டு)திருப்பூர், புஷ்பா தியேட்டர் ஸ்டாப் செல்லும் ரயில்வே உயர்மட்ட பாலத்தின் மேல் பகுதியில் உயரமாக, முட்புதர்கள், முள்செடிகள் வளர்ந்து வருகிறது. மரக்கிளையை வெட்ட வேண்டும்.- ஆறுமுகம், அவிநாசி ரோடு. (படம் உண்டு)நாய்கள் தொல்லைதிருப்பூர், 23வது வார்டு, சூர்யா காலனி - கோல்டன் நகர் வீதியில் நாய்த்தொல்லை அதிகமாக உள்ளது. ரோட்டில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்துச் செல்ல வேண்டும்.- கோவிந்தன், சூர்யா காலனி. (படம் உண்டு)திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வெளிவளாகத்தில் நாய்கள் சுற்றித்திரிகிறது. வாகனங்களுக்கு கீழ் படுத்துறங்கி, அசுத்தம் செய்கிறது.- முருகன், தாராபுரம் ரோடு. (படம் உண்டு)முடங்கிய சாலைப்பணிதிருப்பூர், அவிநாசி ரோடு - பி.என்., ரோடு சந்திப்பு, சரவணா வீதியில் ரோடு போட கற்கள் கொட்டி அப்படியே உள்ளது. வாகன ஓட்டிகள் சென்று வர முடியவில்லை.- தினேஷ்குமார், சரவணா வீதி. (படம் உண்டு)சுகாதாரச் சீர்கேடுதிருப்பூர், திருவள்ளுவர் தோட்டம் பகுதியில் தேங்கியுள்ள குப்பையை அள்ள வேண்டும். அள்ளாமல் உள்ள குப்பையால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.- வின்சென்ட்ராஜ், திருவள்ளுவர் தோட்டம். (படம் உண்டு)தொட்டி சேதம்திருப்பூர், 19வது வார்டு, பாரதிநகரில் மேல்நிலை குடிநீர் தொட்டி சேதமாகியுள்ளது. இடிந்து விழும் முன், சீரமைத்தால், மக்களுக்கு ஆபத்து விலகும்.- ரஞ்சித், பாரதி நகர். (படம் உண்டு)சாலையை சீரமைக்கலாமே!திருப்பூர், 15 வேலம்பாளையம் சிக்னல் நால்ரோடு சந்திப்பில் சாலையை சீரமைக்க வேண்டும். குழாய் உடைப்பு ஏற்பட்டதை சரிசெய்யாமல், பாதி துாரத்துக்கு 'பேரிகார்டு' வைக்கப்பட்டுள்ளது.- விஜி, 15 வேலம்பாளையம். (படம் உண்டு)வீணாகும் தண்ணீர்திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, கருமாரம்பாளையம் பெட்ரோல் பாங்க் எதிரே குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி, சாலையும் சேதமாகியுள்ளது. குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.- புஷ்பலதா, ஊத்துக்குளி ரோடு. (படம் உண்டு)* திருப்பூர், ஆத்துப்பாளையம் ரோடு, வெங்கமேட்டில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி சாலை சேதமாகியுள்ளது. குழாய் உடைப்பை சீரமைக்க வேண்டும்.- கார்த்திக், ஆத்துப்பாளையம். (படம் உண்டு)போக்குவரத்து இடையூறுதிருநீலகண்டபுரம், வடக்கு வீதியில் போக்குவரத்துக்கு இடையூறாக, பெரிய தண்ணீர் குழாயை நடக்க வழியின்றி போட்டு வைத்துள்ளனர். மாநகராட்சியினர் அதனை அகற்ற வேண்டும்.- செந்தில்குமார், திருநீலகண்டபுரம். (படம் உண்டு)ரியாக் ஷன்தண்ணீர் வீணாகாதுதிருப்பூர், ஊத்துக்குளி ரோடு, ரயில்வே கேட் அருகே குழாய் உடைந்து தண்ணீர் வீணாவது குறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. மாநகராட்சி மூலம் குடிநீர் குழாய் சரிசெய்யப்பட்டுள்ளது.- நாராயணன், ஊத்துக்குளி ரோடு. (படம் உண்டு)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ