உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இருள்மயம் - சகதிக்காடு சாலைகளில் சங்கடம்

இருள்மயம் - சகதிக்காடு சாலைகளில் சங்கடம்

விளக்கு பழுதுஅவிநாசி, செம்பியநல்லுார் ஊராட்சி, சென்னிமலைக் கவுண்டன்புதுார் அரசு பள்ளி வீதியில் ஆறு மாதமாக தெருவிளக்கு எரிவதில்லை.- பிரகாஷ், சென்னிமலைக் கவுண்டன்புதுார். (படம் உண்டு)திருப்பூர், அவிநாசி ரோடு, காந்தி நகர், பத்மாவதிபுரம் எதிர் வீதியில் தெருவிளக்குகள் இரண்டு மாதமாக எரிவதில்லை.- அசோக்குமார், பத்மாவதிபுரம். (படம் உண்டு)சுகாதாரக்கேடுதிருப்பூர், ஜெய் நகர் போஸ்ட் ஆபீஸ் வீதியில் உபயோகமில்லாமல் உள்ள பிளாஸ்டிக் குடிநீர் தொட்டி அருகே குப்பை கழிவு கொட்டப்படுகிறது. புதர்மண்டி சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.- வசந்தி, ஜெய் நகர். (படம் உண்டு)சாலையில் கழிவுநீர்வஞ்சிபாளையம், கணியாம்பூண்டி, மகாலட்சுமி நகரில் கழிவுநீர் சாலையில் வழிந்தோடி சேறும், சகதியுமாக உள்ளது. மண் கொட்டி சாலையை சீரமைக்க வேண்டும்.- ராஜேந்திரன், மகாலட்சுமி நகர். (படம் உண்டு)வீடு முன் கழிவுநீர்திருப்பூர், எட்டாவது வார்டு, மும்மூர்த்தி நகர் கிழக்கு வீதியில் கழிவுநீர் வீடுகள் முன் தேங்கி நிற்பதால், சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.- தங்கராஜ், மும்மூர்த்தி நகர். (படம் உண்டு)சறுக்கும் சாலைபல்லடம், ஸ்டேட் பாங்க் ஆப் இண்டியா முன் சாலை சேதமாகியுள்ளது. மண் மற்றும் கற்கள் நிறைந்துள்ளதால், வாகன ஓட்டிகள் சறுக்கி விழுகின்றனர். சாலையை சீரமைக்க வேண்டும்.- பழனிசாமி, பல்லடம். (படம் உண்டு)நிறைந்த குப்பைதிருப்பூர், நெருப்பெரிச்சல் - தோட்டத்துப்பாளையம் ரோட்டில் குப்பை தொட்டி நிறைந்த பின், குப்பைகளை அகற்றுவதில்லை. தினசரி குப்பை அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கீதா, தோட்டத்துப்பாளையம். (படம் உண்டு)கால்வாய் அடைப்புதாராபுரம், சுந்தரம் அக்ரஹாரம் வீதியில், சாக்கடை கால்வாய் அடைப்பு ஏற்பட்டு மாதக்கணக்கில் கழிவுநீர் தேங்கியுள்ளது. சுத்தம் செய்யாமல் அப்படியே விடப்பட்டுள்ளதால், துர்நாற்றம் வீசுகிறது.- இளங்கோ, தாராபுரம். (படம் உண்டு)வீணாகும் தண்ணீர்திருப்பூர், சாமுண்டிபுரம், அறிவொளி வீதியில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. சாலை சேதமாகிறது. குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.- ரவிக்குமார், அறிவொளி வீதி. (படம் உண்டு)ரியாக் ஷன்கொட்டப்பட்ட மண்திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, பாளையக்காடு, மாரியம்மன் கோவில் வீதியில் சாலை சேதமாகி, குழியாகியிருந்தது. 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியான பின், மாநகராட்சி மூலம் மண் கொட்டப்பட்டுள்ளது.- சங்கர்சதீஷ், பாளையக்காடு. (படம் உண்டு)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ