தீனு ஸ்ரீ டென்டல் கிளினிக் திறப்பு
திருப்பூர்: திருப்பூர், அவிநாசி ரோடு, பெரியார் காலனி, டி.டி.பி., மில் ரோட்டில் தீனு ஸ்ரீ டென்டல் கிளினிக் என்ற புதிய பல் மருத்துவ மனை திறக்கப்பட்டது. மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் திறந்துவைத்தனர். பார்மசியை சங்கரா பல் மருத்துவமனை டாக்டர் நடராஜன் திறந்துவைத்தார். டாக்டர்கள் தீனுப்ரியா, ராம்குமார், தீபக்குமார், சுரேஷ்குமார் உள்ளிட்டோர் மருத்துவமனை வசதிகளை எடுத்து கூறினர். பி.வி.ஆர்., குழுமம், கார்த்திக் கலர்ஸ் குழுமம் குடும்பத்தினர் வரவேற்றனர். டாக்டர் தீனுப்ரியா கூறுகையில், 'இங்கு அனைத்து வகை பல்சிகிச்சைகள் மற்றும் பொது மருத்துவமும் பார்க்கப்படும்' என்றார்.