அவிநாசி கோவிலில் திரண்ட பக்தர்கள்
தீபாவளியையொட்டி வழிபட அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் நேற்று பக்தர்கள் குவிந்தனர். உள்பிரகாரத்தில் அம்மன் கோவில் வரை நீண்ட பக்தர்களின் வரிசை, பின் வளைந்து, மீண்டும் சபா மண்டபம் வரை நீடித்தது. பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து தரிசிக்க வேண்டியிருந்தது. இன்று அமாவாசையை முன்னிட்டு கோவில் முழு நேரமும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக திறக்கப்படும் என கோவில் செயல் அலுவலர் சபரீஷ் குமார் தெரிவித்தார்.