உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாவட்ட தடகள போட்டி; வாளவாடி பள்ளிக்கு பதக்கம்

மாவட்ட தடகள போட்டி; வாளவாடி பள்ளிக்கு பதக்கம்

உடுமலை; மாவட்ட அளவிலான தடகள போட்டியில், வாளவாடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவர்கள் ஒரு தங்கம், மூன்று வெள்ளி மற்றும் ஒரு வெண்கல பதக்கமும் பெற்றுள்ளனர். தேசிய விளையாட்டு தினத்தையொட்டி, திருப்பூர் மாவட்ட தடகள சங்கத்தின் சார்பில் குழந்தைகளுக்கான தடகள விளையாட்டுப்போட்டிகள் நடந்தன. உடுமலை அரசு கலைக்கல்லுாரியில் இப்போட்டிகள் நடந்தது. இதில், 600க்கும் அதிகமான குழந்தைகள் பங்கேற்றனர். அதில் வாளவாடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்களும் பங்கேற்று, ஒரு தங்கம், மூன்று வெள்ளி மற்றும் ஒரு வெண்கல பதக்கமும் பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ