உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இறக்கும் ஆடுகளுக்கு உடனடி நிவாரணம்; விவசாயிகள் வலியுறுத்தல்

இறக்கும் ஆடுகளுக்கு உடனடி நிவாரணம்; விவசாயிகள் வலியுறுத்தல்

திருப்பூர்; 'இறக்கும் ஆடுகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்' என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். வெள்ளகோவில், அகரபாளையம்புதுாரில், கோவிந்தராஜ் என்பவருக்கு சொந்தமான ஆடுகளை நாய்கள் கடித்து குதறியதில், 4 ஆடுகள் பலியாகின. 3 ஆடுகள் காயமடைந்தன. கால்நடை பராமரிப்புத்துறையினர் இறந்த ஆடுகளை பிரேத பரிசோதனை செய்தனர். இறந்த ஆடுகளுக்கு காலம் தாழ்த்தாமல் நிவாரணம் வழங்க வேண்டும்; தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை அமைச்சர் சாமிநாதன், கலெக்டர், தாசில்தார் உள்ளிட்டோரின் கவனத்துக்கு விவசாயிகள் கொண்டு சென்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ