மேலும் செய்திகள்
சூழ்ந்த முட்புதர்; மாயமான சுகாதாரம்
14-Oct-2024
வெளிச்சம் தெரியாத சாலை; குழியால் தடுமாறும் வேளை
01-Oct-2024
கொசுத்தொல்லைபல்லடம், நான்காவது வார்டு, குமரன் வீதி, ஆறு மாதமாக கொசு மருந்து அடிக்கவில்லை. கொசுத்தொல்லை அதிகமாகிறது. குழந்தைகளுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படுகிறது.- சேகர், குமரன் வீதி.மின்சாரம் வீண்சூசையாபுரம் இரண்டாவது வீதியில் பகலிலே தெருவிளக்கு எரிந்து மின்சாரம் வீணாகிறது.- வின்சென்ட்ராஜ், சூசையாபுரம். எரியாத விளக்குகலெக்டர் அலுவலகம் எதிர்புறம், கருப்பகவுண்டன்பாளையம் செல்லும் ரோட்டில் ஒரு வாரமாக தெருவிளக்குகள் எரிவதில்லை.- ரவி, பல்லடம் ரோடு.ஜல்லியுடன் நிற்கிறதுதென்னம்பாளையம் மாநகராட்சி பள்ளி வீதியில் ரோடு போட ஜல்லி கொட்டி அப்படியே விடப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் சென்று வர சிரமமாக உள்ளது. ரோடு போட வேண்டும்.- செல்வராஜ், தென்னம்பாளையம். (படம் உண்டு)மழைநீர் தேக்கம்போயம்பாளையம், குருவாயூரப்பன் நகர் ஆரம்ப சுகாதார நிலையம் செல்லும் வழியில் மழை பெய்யும் போதெல்லாம், தண்ணீர் தேங்கி நிற்கிறது. மருத்துவமனை அருகே கொசுத்தொல்லை அதிகரிக்கிறது.- பாலாஜி நவீன், குருவாயூரப்பன் நகர். (படம் உண்டு)வீணாகும் தண்ணீர்திருப்பூர், பெரிய கடை வீதியில் குழாய் உடைந்து தண்ணீர் ஒரு மாதமாக வீணாகிறது.- விக்னேஷ், பெரிய கடை வீதி.திருப்பூர், முனிசிபல் ஆபீஸ் வீதி, வளர்மதி சந்தில் குழாய் உடைந்து தண்ணீர் வினியோகிக்கும் போதெல்லாம் வீணாகிறது.- நாராயணசாமி, முனிசிபல் ஆபீஸ் வீதி. (படம் உண்டு)மண்ணரை, வி.ஏ.ஓ., ஆபீஸ் வீதியில் குழாய் உடைந்து தண்ணீர் சாலையில் அடிக்கடி வீணாகிறது.- மேகலா, மண்ணரை. (படம் உண்டு)வழிநெடுக குப்பைபெருமாநல்லுார் ஊராட்சி, ஈரோடு ரோடு, பனங்காடு பிரிவில் சாலையோர வழிநெடுகிலும் குப்பை குவித்து வைக்கப்பட்டுள்ளது. அவ்வழியாக செல்ல முடியாதபடி துர்நாற்றம் வீசுகிறது.- குமார், பனங்காடு பிரிவு. (படம் உண்டு)குப்பையால் துர்நாற்றம்பட்டுக்கோட்டையார் நகர் பகுதியில் குப்பை முழுமையாக அகற்றாமல் மழையில் அப்படியே நனைந்து விடுவதால், துர்நாற்றம் வீசுகிறது.- ராம்குமார், பட்டுக்கோட்டையார் நகர். (படம் உண்டு)மின் விபத்து அபாயம்அனுப்பர்பாளையம், திலகர் நகர் ஐந்தாவது வீதியில், மரக்கிளைகளுக்குள் மின்கம்பிகள் பயணிக்கிறது. மின்கம்பி உராய்வதால் மின்விபத்து அபாயம் உள்ளது.- வரதராஜ், திலகர் நகர். (படம் உண்டு)மறையும் வெளிச்சம்கொங்கு மெயின் ரோடு, டி.எஸ்.ஆர்., லே-அவுட், நான்காவது வீதியில் தெருவிளக்கு வெளிச்சம் சாலையில் தெரியாத அளவு சுற்றிலும், மரக்கிளைகள் வளர்ந்துள்ளன.- குமார், டி.எஸ்.ஆர்.,லே-அவுட். (படம் உண்டு)கால்வாய் அடைப்புதிருப்பூர், அவிநாசி ரோடு, டீச்சர்ஸ் காலனி, மூன்றாவது வீதியில், கால்வாய் அடைப்பு ஏற்பட்டுள்ளது. கால்வாய் முழுதும் முட்புதர் வளர்ந்துள்ளது. சுத்தம் செய்ய வேண்டும்.- மகேஸ்வரி, டீச்சர்ஸ் காலனி.அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை முன் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது.- மணி, தாராபுரம் ரோடு. (படம் உண்டு)மழைநீர் தேக்கம்அங்கேரிபாளையம் - அவிநாசிக்கவுண்டம்பாளையம் ரோட்டில் மழை பெய்யும் போதெல்லாம், மூன்றடிக்கு மழைநீர் தேங்கி விடுகிறது. மழைநீர் வெளியேற மாற்று வழி ஏற்படுத்த வேண்டும்.- அவிநாசியப்பன், அவிநாசிக்கவுண்டம்பாளையம். (படம் உண்டு)சாலை அரிப்புவீரபாண்டி - குப்பாண்டம்பாளையம் பிரிவு சாலையில் மழைநீர் அதிகளவில் வழிந்தோடுவதால், சாலை அரிக்கப்படுகிறது. மழைநீர் செல்ல சாலையோரம் வழி ஏற்படுத்த வேண்டும்.- கோவிந்தராஜ், வீரபாண்டி. (படம் உண்டு)ரியாக் ஷன்ஒளிர்ந்த விளக்குதிருப்பூர், செங்குந்தபுரத்தில் தெருவிளக்குகள் எரியாமல் இருப்பதாக 'தின மலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. மாநகராட்சி மூலம் விளக்குகள் சரிசெய்யப்பட்டு, தற்போது எரிகிறது.- அருண், செங்குந்தபுரம். (படம் உண்டு)சாலை சீரமைப்புதிருமுருகன்பூண்டி ரிங் ரோடு, இ.எஸ்.ஐ., மருத்துவமனை அருகே குழாய் உடைந்த தண்ணீர் வெளியேறி சாலை சேதமாகியிருந்தது. 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானதும், சாலை தற்காலிகமாக சரிசெய்யப்பட்டுள்ளது.- மனோகரன், அண்ணா காலனி. (படம் உண்டு)
14-Oct-2024
01-Oct-2024