பானலிங்கேஸ்வரர் கோவிலில் கங்கா தீர்த்த அபிேஷகம்
உடுமலை, ; செல்லப்பம்பாளையம் பானலிங்கேஸ்வரர் கோவிலில், கங்கா தீர்த்தத்தால், அபிேஷகம் செய்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.உடுமலை செல்லப்பம்பாளையம் பானலிங்கேஸ்வரர் கோவிலுக்கு, காசி முக்தானந்த புரி சரஸ்வதி சுவாமிகள் நேற்றுமுன்தினம் வருகை புரிந்தார்.காசியில் இருந்து கொண்டு வரப்பட்ட கங்கா தீர்த்தத்தால், பானலிங்கேஸ்வரர், கங்காதேவி மற்றும் அன்னபூரணிக்கு அபிேஷகம் செய்தார். தொடர்ந்து காசி புராணம் குறித்து மக்களிடையே பேசினார். கோவில் வளாகத்தில், ருத்ராட்ச மரம் நடப்பட்டது.