உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அரசு கல்லுாரி கட்டடம் பழுது

அரசு கல்லுாரி கட்டடம் பழுது

பல்லடம்-, மங்கலம் ரோட்டில், அரசு கலைக்கல்லுாரி செயல்பட்டு வருகிறது. கல்லுாரிக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டு, கடந்த, 2017 முதல் பயன்பாட்டுக்கு வந்தது. இங்கு, ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ, மாணவியர் படிக்கின்றனர். கல்லுாரி கட்டடத்தின் பல்வேறு இடங்களில், சுவர்களில் உள்ள சிமென்ட் பூச்சுகள் சிறிது சிறிதாக பெயர்ந்து செங்கற்கள் வெளியே தெரிகின்றன.வெயில் மற்றும் மழைக்கு, சுவர்கள் பெயர்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கட்டடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை