உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குளங்களில் கிராவல் மண் வெட்டிக் கடத்தல்

குளங்களில் கிராவல் மண் வெட்டிக் கடத்தல்

பொங்கலுார்: திருப்பூர் மாவட்டத்தில், பெரும்பாலான குளங்களில் வண்டல் மண்ணே கிடையாது. உப்பாறு, கத்தாங்கண்ணி உள்ளிட்ட விரல் விட்டு எண்ணக் கூடிய குளங் களில் மட்டுமே வண்டல் மண் உள்ளது. வண்டல் மண் பெயரளவுக்கு கூட இல்லாத குளங்களில் எல்லாம் வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு அதிகாரிகள் அனுமதி கொடுத்துள்ளனர். விவசாயிகள் என்ற போர்வையில் மண் கடத்தல் வியாபாரிகள் கிராவல் மண்ணை வெட்டி விற்பனை செய்து உள்ளனர். பல்வேறு குளங்களில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கிணறு தோண்டுவதைப் போல மண்ணை வெட்டி விற்பனை செய்துள்ளனர். இதனால் குளக்கரை சேதம் அடையும் அபாயம் அதிகரித்துள்ளது. எனவே, மாவட்டத்திலுள்ள அனைத்து குளங்களையும் ஆய்வு செய்ய வேண்டும். எந்தெந்த குளங்களில் முறைகேடாக கிராவல் மண் வெட்டி விற்பனை செய்யப்பட்டுள்ளது என்பதை கண்டறிந்து, முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள், தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !