உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உயர் மின்விளக்கு அமைக்கணும்

உயர் மின்விளக்கு அமைக்கணும்

உடுமலை:உடுமலை புது பஸ் ஸ்டாண்டில், உயர்மின் விளக்கு அமைக்க நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். உடுமலை புது பஸ் ஸ்டாண்டில், பழநி நோக்கி செல்லும், புறநகர் பஸ்கள், கிழக்கு பகுதிக்கு செல்லும் டவுன்பஸ்கள் இயக்கப் படுகின்றன. இங்கு போதிய மின்விளக்குகள் இல்லை. மேலும், இங்கு உயர்மின் விளக்கு இல்லாததால், இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே, நகராட்சி அதிகாரிகள் மின்விளக்கு அமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க் கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி